Friday 30 November 2012

ஒரு இன அழிவுக்கு பின்னால்...!



ஒரு கடிதம்

ஒரு ஊர்வலம்
ஒரு குற்றச்சாட்டு
ஒரு மனிதசங்கிலி
ஒரு கடையடைப்பு
ஒரு உண்ணாவிரதம்

இவைகளைக்கொண்டு
நம்மால் அழிக்கமுடிந்தது

ஒரு இனத்தை!

Sunday 4 November 2012

ஆதிச்சொல்


ஆதிச்சொல்...!

ஆதிச்சொல்லொன்று
அல்லலுருகிறது
தன்னை யாரும் புழங்கவில்லை
என்று முறையிடுகிறது!

தான் பேசப்படுவதில்லை
என்று விசனப்படுகிறது
தான் எழுதப்படுவதில்லை
என்று வருத்தப்படுகிறது!

கம்பனும் வள்ளுவனும்
தன்னை உபயோகித்ததை
சொல்லி சொல்லி பெருமைப்படுகிறது!

தான் இனியும்
புழக்கத்தில் இருக்கமாட்டோமென்று
தீர்க்கமாய் நம்புகிறது!

ஒரு எழுதுகோலெடுத்து
தன்னையே அது
பக்கம் பக்கமாய் எழுதிபார்க்கிறது!

ஒரு மலையுச்சிக்குச்சென்று
தன்னையே அது
பலமுறை கூப்பிட்டுப்பார்க்கிறது!

மற்றவரிடம் அகப்பட்ட‌ திருப்தி
அப்போதும் வராததால்
அங்கிருந்து குதித்து
தற்கொலை செய்துகொள்கிற‌து!