Monday 26 October 2009

எனன வேண்டுவது உன்னிடம்...!

நான் உன்னிடம் என்ன வேண்டுவது என்று
எனக்கு கொஞ்சம் எடுத்துச்சொல் கடவுளே!

மதமில்லாத உலகு தாவென்றா
எப்படி முடியும் நீ தான்
ஏகப்பட்ட மதம் தரித்து எல்லைப் பிரச்சனையில்
சிக்கித் த‌விக்கிறாயே!
ஜாதியில்லாத‌ நாடு தாவென்றா
எப்படி முடியும் நீ தான்
ஐயரை மட்டும் அருகில் வைத்து கொண்டு
அடுத்தவரையெல்லாம் வெளியில் வைத்திருக்கிறாயே!
போதையில்லாத‌ புவி தாவென்றா
எப்படி முடியும் நீ தான்
சாராய‌மும் பிராந்தியும் வைத்து
ப‌டைக்க‌ச் சொல்லி ப‌ட‌ப‌ட‌க்கிறாயே!
புகையில்லாத பிரபஞ்சம் தாவென்றா
எப்படி முடியும் நீ தான்
உடுக்கடித்து குறிச்சொல்லி
சுருட்டுக்கட்டு கேட்டுத்தொலைக்கிறாயே!

லஞ்சமில்லாத சமுதாயம் தாவென்றா
எப்படி முடியும் நீ தான்
அதிக‌ப் ப‌ண‌ம் தருபவர்க‌ளை அழைத்து பக்கத்தில் வைத்து
பூஜை செய்ய‌ச்சொல்லி புல‌ங்காகித‌ம் அடைகிறாயே!
கொலையில்லா த‌ர‌ணி தாவென்றா
எப்படி முடியும் நீ தான்
ஆடு கோழி அறுக்க‌ச்சொல்லி ந‌ர‌ப‌லியும் கொடுக்க‌ச்சொல்லி
உச்ச‌ரித்து ந‌ச்ச‌ரிக்கிறாயே!
ஆடம்பரமில்லா பூமி தாவென்றா
எப்படி முடியும் நீ தான்
வைரத்தாலும் வைடூரியத்தாலும் அலங்கரிக்கச் சொல்லி
ஆட்டம் போட்டு அடம்பிடிக்கிறாயே!
ஆசையேயில்லாத‌ நானில‌ம் தாவென்றா
எப்படி முடியும் நீ தான்
கோபுரம் தங்கத்திலும் கோட்டை தந்தத்திலும் வேண்டுமென்று
சாமியாடி கேட்டு சாதித்துக்கொள்கிறாயே!
பல தாரமில்லாத வையகம் தாவென்றா
எப்படி முடியும் நீ தான்
கக்கத்துக்கு ஒன்றாய் மனைவியை அணைத்து
புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கிறாயே!
காம கவர்ச்சியில்லா பூவுலகு தாவென்றா
எப்படி முடியும் நீ தான்
காமசூத்திரத்துக்கு மாடலாய் நிற்ப‌துபோல்
ஆங்காங்கே ஆடைகளை துறந்து காட்சி தருகிறாயே!
வன்முறையில்லாத பூலோக‌ம் தாவென்றா
எப்படி முடியும் நீ தான்
கைக்கொன்றாய் ஆயுதம் எந்தி
கண்களிலே கோபவெறி காட்டி நிற்கின்றாயே!
அடிமைத்தனமில்லாத‌ நிலப்பரப்பு தாவென்றா
எப்படி முடியும் நீ தான்
வில‌ங்குகளை அடிமையாக்கி
வாக‌ன‌மாய் அட‌க்கி வைத்திருக்கிறாயே!
சத்தியமாய் எனக்குத் தெரியவில்லை
நீயே சொல் கடவுளே நான்
எனன வேண்டுவது உன்னிடம் என்று!

சீதனம்


வெட்கப்பட்டு...


Saturday 10 October 2009

ஊசிப் பட்டாசா... உரசும் பட்டாசா...

தீபாவளிக்கு முன்னதாகவே புவனேஸ்வரி என்னும் ஊசிப் பட்டாசை கொழுத்திப் போட்டு அலப்பரையை ஆரம்பித்து வைத்திருக்கிறது விபச்சாரத் தடுப்பு(!) போலீஸ்... 'அட.. இது நமத்துப்போனதுப்பா... வெடிக்காது..' என்று அலட்டிக் கொள்ளாமல் இருந்தவர்களுக்கு மத்தியிலோ ஒரத்திலோ விழுந்து வெடித்துச் சிதறி ப‌லரை சின்னா பின்னமாக்கியது புவனேஸ்வரி விட்ட நைட்ரஜன் ராக்கெட்... அதன் பிறகுத்தான் இது ஊசிப் பட்டாசு இல்லை பலரை உரசும் பட்டாசு என்பது தெரிந்து இப்போது தானை தமிழ்நாடே அடுத்து என்ன என்ற‌ பெரும் கேள்வியோடு அல்லோல கல்லோலப்பட்டு கிடக்கிறது...

ஒரு பக்கம் திரையுலகம் திக்கும் திசையும் தெரியாமல், முக்கும் முனையும் புரியாமல் பதைத்து கொதித்து தெருவிற்க்கு வந்து விட்டது... மறுபக்கம் பத்திரிக்கையுலகம் உருண்டு திரண்டு ஒன்று சேர்ந்து தலையும் காலும் வாலும் புரியாமல் கூடிநின்று கெக்கரிக்கிறது, கொக்கரிக்கிறது... அந்த பக்கம் புவனேஸ்வரி இதுபோல‌வோ அதுபோல‌வோ எதுபோல‌வோ சொல்ல‌வே இல்லை என்று சாராய‌த்தில் அடித்து ச‌த்திய‌ம் செய்கிற‌து காவ‌ல்துறை...

அர‌சுக்கு தின‌ம‌ல‌ரின் மேல் ஏற்கனவே ஒரு க‌ண் இருந்தாலும் இல்லாவிட்டாலும் க‌ண்ணி வைக்காம‌லேயே க‌ண்ணியில் வ‌ந்து வலியக்க சிக்கியவர்களை வன்கொடுமைச் சட்டத்தில் கைது செய்யாமல் வெறென்ன செய்து திரையுலகினரை திருப்தி செய்யும் அரசு...

இதற்க்கிடையில் அதிரி புதிரிக்கு விளங்கியும் விளங்கி தொலைக்காமலும் சில விசயங்கள் கேழே...

  • எங்கேயோ போன டைனோசரை எதிலேயோ கொண்டாந்து விட்டு இப்படி எல்லோரையும் எங்களைச் சுற்றி நின்னு கும்மியடிக்க விட்டுட்டீங்களேய்யா என்று காவல் துறையை அரசு கடிந்து கொண்டிருக்குமா... இல்லையா..
  • என்னை போட்டோ எடுக்க அனுமதித்தால் நிர்வாணமாக நிற்ப்பேன் என்று கைதின் போது நியூக்ளியர் பாம் போட்ட புவனேஸ்வரியை கண்டு காவல் துறை அரண்டு மிரண்டு அல்லு வாங்கியிருக்குமா இல்லையா...
  • புவனேஸ்வரி கூறியிருக்காமல் தினமலர் லெனின் எப்படி இந்த செய்தியை அவர் சொன்னதாக தைரியமாக வெளியிட்டார் அல்லது வெளியிட முடியும்... அவர் குறிப்பிட்டிருந்த நடிகைகளுக்கும் அவருக்கும் வேறு ஏதாவது உள்குத்து இருந்திருக்குமா...
  • ஓருவேளை லெனின் இதை வெளியிட்டு இந்த விசயம் களேபரம் ஆகாமல் இருந்திருந்தால் சில பிரபல நடிகைகளும், பல பெரும்(!) நடிகைகளும் சிக்கி சின்னா பின்னம் ஆகியிருப்பார்களோ...
  • புவனேஸ்வரி அப்படி கூறியிருந்தால் காவல்துறை அவர்களையும் கைது செய்திருக்குமா... இல்லை புவனேஸ்வரிக்கும் இவர்களுக்கும் ஏதாவது உள்ளே வெளியே ஆட்டத்தில் பைசல் ஆகாத கணக்கிருந்து அதற்க்காகவா இந்த கைது...
  • ஆள் பலம், பண பலம், பதவி பலம் என்று எதையும் பற்றி கவலைப்படாமல் மற்றவர்களை அசால்ட்டாக சந்திக்கு இழுத்துவிட்டிருக்கும் புவனேஸ்வரி யிடம் இருப்பது தைரியமா, திமிரா, அசட்டுத்தனமா, பொறாமையின் உச்சமா...
  • திரண்ட திரையுலகம் நடிகைகள் கண்ணகிகள் தான் என்று கூவி கூவி பிரகடனப் படுத்தியிருக்கிறார்களே அது யாரை நம்ப வைக்க பத்திரிக்கைகளையா இல்லை பொதுமக்களையா...
  • நடிக நடிகைகள் பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசியதற்க்காக‌ அவர்கள் மேல் எதாவது ஒரு வினோதமான சட்டம் பாயுமா பாயாதா...
  • பத்திரிக்கை துறையும் திரைத்துறையும் ஒன்றுக்கு ஒன்று இரண்டற கலந்தது, இருவரது தயவும் இருவருக்கும் தேவை எனும் பட்ச்சத்தில் மேலும் இந்த பிரச்சனை பூதாகரம் எடுக்குமா... எடுக்காதா...

இந்த விசயத்தில் இத‌ற்க்கு மேற்க்கொண்டு கீழே உள்ள‌து போல் ஒரு நிகழ்ச்சி ந‌ட‌ந்தால் பெரிய ஆச்ச‌ரிய‌ம் ஒன்றும் இருக்கப்போவதில்லை தானே...

'இரு துறைக‌ளுமே என் இரு க‌ண்க‌ளை போன்ற‌து... இதில் எந்த‌ க‌ண்ணில் த‌ண்ணீர் வ‌ந்தாலும் என் ம‌ன‌து உடைந்து போகும்...' என்று அந்த கண்கள் க‌ல‌ங்க‌ முத‌ல்வ‌ர் இரு துறையையும் கூட‌ வைத்துக்கொண்டு போட்டோவிற்க்கு போஸ் கொடுக்க‌லாம்... அதை தொடர்ந்து, மான‌ங்கெட்ட‌வ‌ன் ம‌த்தியான‌ம் குடிச்சா என்ன‌ சாயாங் கால‌ம் குடிச்சா என்ன‌... போதை வ‌ந்தா ச‌ரி தாங்கற‌ மாதிரி இருதுறையும் சேர்ந்து 'ச‌மாதான‌ம் செய்து வைத்த‌ ச‌ரித்திர‌ நாய‌கன்' என்கிற‌ ப‌ட்ட‌தை முதல்வருக்கு கொடுக்க‌ ஒரு விழா எடுப்பார்க‌ள்... அந்த‌ விழாவில் இரு துறையின‌ரும் ஒருவ‌ரை ஒருவ‌ர் புக‌ழ்ந்து கொண்டு கூட‌வே முத‌ல்வ‌ரையும் புக‌ழ்வார்க‌ள்... முத‌ல்வர் புன்முறுவலிட்டப்படி ரசிப்பார்...

நான்கு சுவத்துக்குள் நடக்கும் இந்த கண்றாவியை படம் பிடித்து ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமை நல்ல நேரமாகப் பார்த்து குடும்ப தொலைக்காட்சியில் குளோசப்பில் ஒளிப்பரப்பித் தொலைப்பார்கள்... அதை வேண்டா வெருப்பிற்க்கு பார்த்து நமக்கு கண்டாமிருக காய்ச்சல் வரும் அபாயம் வரும்... எதற்க்கும் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் தானே...

Friday 9 October 2009

வாழ்த்துக்கள்!

தமிழக நடிகைகள் அடித்துக்கொண்டிருக்கும் கூத்துக்கும் கூம்மாளத்துக்கும் மத்தியில் சத்தமில்லாமல் நோபல் பரிசு வென்ற தமிழர் வெங்கட்ராமனை மார்கழி பூங்கொத்தும் புன்னகையும் கொடுத்து வாழ்த்துகிறது.

ஆடியில் காத்தடிக்கும்போது தான் தெரியும் அம்மிக்கல்லின் அவசியம்ங்கர மாதிரி வெங்கட்ராமன் பரிசு பெற்ற பிறகு தான் அவரை எல்லோரும் சொந்தம் கொண்டாடுகிறார்கள். காசு கொடுத்து வாங்கலைனாலும் பச்ச மிளகாய் ஒரைக்குமாம் அது மாதிரி பிறப்பை கொடுத்த தமிழ்நாடு ஒரு பக்கம், பள்ளி படிப்பை கொடுத்த குஜராத் ஒரு பக்கம், கேம்பிரிட்ஜில் வேலை கொடுத்த பிரிட்டன் ஒரு பக்கம், குடியுரிமை கொடுத்த அமெரிக்கா ஒரு பக்கம்னு வளைச்சி வளைச்சி கொண்டாடுறாங்க... கத்தரிக்கா முத்தினா சந்தையில ஏது விலை... இளசா இல்லன்னாலும் மவுசா இருந்திட்டா இப்பிடித்தான்... எது எப்பிடி இருந்தா என்ன... நமக்கு பெருமை நம்ம தமிழ் உயிரணுக்கள் தான் அவுரு உடம்புலயும் ஓடுது அப்படிங்கறதுதான்...

அட... ஆமாம்பா... அவர் கண்டுபிடுச்சதும் இது சம்மந்தப்பட்டது தான்... உயிரணுக்கள்ள இருக்கிற DNAகள் கொடுக்கிற கட்டளைகளை வைத்துதான் ரீபோசோம்கள உடலுக்கு தேவையான அனைத்து புரோட்டின்களையும் உற்பத்தி செய்கின்றன... DNAகள் கொடுக்கிற கட்டளைகளை ரீபோசோம்கள் எப்பிடி புரிஞ்சிக்குதுங்கற‌த அக்கு வேற ஆணி வேறயா பிரிச்சி மேஞ்சிருக்காராம் நம்மாளு... அத தெரிஞ்சிகிட்டா நோய் உண்டாக்கிற கிருமிகல்ல இருக்கிற ரீபோசோம்கள கட்டுப்படுத்தி நோயை குறைக்கலாமாம்... அதாவது போட்டுல அடிச்சி பொறி கலங்கற மாதிரி சொல்லனும்னா உடம்புல இருக்கிற கெட்ட ரெத்தத்தையெல்லாம் நல்ல ரெத்தமா மாத்துறமாதிரி... அடடா... அப்டின்னா அத உடனே நம்ம அரசியல்வாதிகளுக்கு செஞ்சாகனுமே... வெங்கட் சார்... எப்ப வர்றீங்க சென்னைக்கு...

Monday 5 October 2009

வாங்க கலாய்க்கலாம்...

இவர்களிடம் அதிரி புதிரி அய்யாவு கேட்க‌ நினைத்தது...
ஜெயலலிதாவிடம்: போயஸ் தோட்டத்தில் இப்போ இலையுதிற்க் காலமாமே...
ராமதாஸிடம்: அடுத்தது எங்கன்னு முடிவு பண்ணியாச்சா...
கருணாநிதியிடம்: உங்கள புகழ்றத்துக்கு யாரு தேதி கேட்டாலும் உடனே கொடுக்கறீங்கலாமே... எனக்கும் ஒரு தேதி கொடுங்களேன்...
தமிழக திரைப்பட விருது கமிட்டியிடம்: உளியின் ஓசைக்கு மூணு விருதாமே... என்ன கொடுமை சார் இதெல்லாம்...
கவிஞர் வாலியிடம்: கலைஞரை புகழ்றதையே ஒரு வேலையா வச்சிருக்கீங்க போல...
கவிஞர் விஜயிடம்: ஞாபகங்கள்ன்னு ஒரு படம் எடுத்தீங்கள அது உங்க ஞாபகங்கத்துல இருக்கா...
அறந்தாங்கி திருநாவுக்கரசிடம்: உங்க புயல் காங்கிரஸ் பக்கமா கரையேரப்போவதா சொல்றாங்க... பாவம் காங்கிரஸ்...
நடிகர் கார்த்திகிடம்: காணாம‌ப்போன கட்சியை விடுங்க... உங்க‌ கண்ணாடி தொப்பியையாவது கண்டுபிடுச்சீங்களா...
வைக்கோவிடம்: அடுத்த கட்சிக்கு ஆள் அனுப்புறத நிறுத்திட்டீங்களா இல்லையா...
சரத்குமாரிடம்: ஜக்குபாய் கேசட் வெளியிட கலைஞரை கூப்பிட்டு கூல் பண்ணிட்டீங்க‌...சொந்த செலவுல சூனியம் வச்சுகிட்டீங்கல... அதாங்க உங்க கட்சி... அதுக்கு அடுத்து மூடுவிழாவா...
அத்வானியிடம்: மீண்டும் ராமர் கோவில் கட்டுவேன்... கட்சியவிட்டு விலகுவேன்னு... கைப்புல்ல கணக்கா ஒரே காமெடிதான் போங்க...
பன்னீர்செல்வத்திடம்: நெருப்பில்லாம புகையாதுங்கறாங்க.. உண்மையா...
திருமாவளவனிடம்: சோனியாகாந்திய சந்திச்சா இலங்கையைப்பத்தி மூச்சு விடறது இல்ல போலிருக்கு... பதவி கொடுத்தவங்களாச்சே... பார்த்து பக்குவமா நடந்துக்கஙக...
காந்தியிடம்: உங்க பிறந்தநாளும் அதுவுமா ஒரு எட்டு வந்து உங்க தேசத்த பார்த்துட்டு போகக்கூடாதா, அது இப்ப‌ என்ன கதியா இருக்குன்னு!
நடிகர் விஜயிடம்: ஒரு தட‌வை முடிவு பண்ணீட்டா உங்க பேச்சை நீங்களே கேட்க மாட்டீங்களே... ஆனா கட்சி ஆரம்பிக்கிறதா முடிவு பண்ணீட்டு டக்குன்னு பேக் அடிச்சிட்டீங்களே... என்னாங்கண்ணா இது...
த‌ங்க‌பாலுவிட‌ம்: தமிழக காங்கிரஸுக்கு த‌லைவரா இருக்கீங்களே... அந்த பதவிக்கு என்ன தான் வேலைன்னு எப்ப‌ சொல்ல‌ப்போறீங்க‌ உலகத்துக்கு...
விஜயகாந்திடம்: வீட்ல தெலுங்குல தான் மாட்லாடுரீங்கலாம்... அப்படியே ஆந்தராவுலயும் ஒரு கிளையை ஆரம்பீங்களேன்...
காடு வெட்டி குருவிடம்: பேச்சையே காணும்... மறுபடியும் மரம் வெட்ட போய்ட்டீங்களா...
அதிரி புதிரியாய் மீண்டும் வருவேன்...

பகுதி 4


தமிழா


ஜன்னல்


பிறகேன் கவலை


கன்னி


இமை முடி


இடம் மாறி...