Sunday 7 February 2010

சாவுக்கு அழிவில்லை...!


சாவுக்கு
சாவு வருவதில்லை!
த‌ள்ளிப்போட‌ முடியுமோ என்ன‌மோ
அதை த‌டுக்க‌
ஆண்ட‌வ‌னாலும் முடிவ‌தில்லை!

க‌ட‌வுள் தோற்றுப்போன‌ இட‌ம்
சாவு!
ராம‌னும், ந‌பியும், ஏசுவும்
த‌ப்ப‌முடிய‌வில்லை இத‌ற்கு!

சில‌ருக்கு வாழ‌ ஆசை
சில‌ருக்கு சாவ‌ ஆசை
சில‌ருக்கு வாழ்ந்து சாவ‌ ஆசை
சில‌ருக்கு செத்து வாழ‌ ஆசை!

பணக்காரன் ஏழை
தாழ்ந்த ஜாதி உயர்ந்த ஜாதி
முடிந்தவன் முடியாதவன்
எல்லோருக்கும் ஒரே நீதி
சாவில்!

குறி பார்த்தோம்
ஆவியை கேட்டோம்
ஜாத‌க‌ம் க‌ணித்தோம்
எல்லோரும் சொன்னார்க‌ள்
இப்போது க‌ண்ட‌மில்லை என்று
அப்ப‌டியானால்
க‌ண்ட‌மில்லாம‌லில்லை!


தவித்துப் போகிறான் மனிதன்!
எமன் இருக்கிறானா
எங்கே இருக்கிறான்
எதை கூட்டுகிறான்
எதனுடன் கழிக்கிறான்
எதோடு பெருக்கி
எதோடு வகுக்கிறான்!
அவன் கணக்கு சரியா த‌வறா
அவ‌னுக்கு சாவுண்டா
அவ‌ன் இற‌ந்தாள் அழுவாருண்டா!
உல‌குக்கு தெரியாத
சூட்ச‌ம‌ம் இது!
ஏன் எங்கே எப்ப‌டி யார் எத‌ற்கு
என்ற‌ கேள்விக‌ள் இங்கே
ப‌ல‌யுக‌மாய் நிர்க‌தியாய்!

கூடியிருப்பவர்களின் அழுகை
இங்கே மீட்டெடுக்க‌ அல்ல‌
நினைவு கூற‌!
வ‌ந்த‌வ‌ர் சென்றே ஆக‌வேண்டும்
இது பொது விதி!
வ‌ந்த‌ விருந்தின‌ரை
வ‌ழிய‌னுப்ப்பி வைக்க‌
நாம் ப‌ழ‌க‌லாம்
வாழ்ந்த‌வ‌ரை நிம்ம‌தி என்று
வ‌ந்தவ‌ரும் செல்லலாம்!

சாவு நிர‌ந்த‌ர‌மான‌து
அத‌ற்கு அழிவில்லை
உல‌கை அழிக்கும் வ‌ரை!
முடிய‌வே முடியாது என்ப‌தை
ஏற்றுத்தான் ஆக‌வேண்டும்!

2 comments:

vasu balaji said...

yatharththam:)

Anonymous said...

Saba

Yes agree there is a life for death in materialistic world.
but in our place so many people found a solution to come out from death and proved by their life ofcourse it is not for normal people their life is spritual.
-Bala-