Saturday 13 February 2010

அது நானாகவும் இருக்கலாம் - காதலர் தின கவிதை


நீ தேடிக்கொண்டிருப்பவன்
ஒருவேளை 
நானாகவும் இருக்கலாம்!

6 அடி 2 அங்குல உயரம்
விரிந்த நிலையில் 
மார்பு 40 இஞ்சும் 
சுருங்கிய நிலையில்
45 இஞ்சும் கொண்டவன்!

மயில் கழுத்து வண்ணத்தில்
தமிழுக்குப் பிடித்த நிறம்
வட்டமேஜை மாநாடு போடுமளவுக்கு 
வட்டமான முகம்!

அங்கொன்றும் இங்கொன்றுமாய்
காமப் பருக்களுடன் 
களைக்கட்டியிருக்கும் கன்னம்
புருவம் உயர்த்தி பார்க்க வைக்கும்
ப‌ருவத்துடன் கணகள்!

வா வ‌ந்து முத்த‌மிடு என்ற‌ழைக்கும்
ரோஜா இதழ்கள் அரைத்து
செய்யப்ப‌ட்ட தடித்த‌ உதடுகள்
அடுத்த‌வ‌ர் ஆசைப்ப‌டும் அள‌வுக்கு
அடர்த்தியான முரட்டு மீசை!
திஷ்டிப் படுமளவுக்கு 
புஷ்டியான உடல்வாகு!

அழ‌கான‌ பெண்க‌ளை பார்த்து ரசிப்பது
ஆன‌ந்த‌ விக‌ட‌னை ப‌டித்து முடிப்ப‌து
பொதுவான‌ பொழுதுபோக்கு!

படித்த அளவுக்கு வேலை
குடிக்க அழைக்கும் ஊதியம்
வாடிக்கையாய் சினிமா பார்ப்ப‌தும்
வேடிக்கையாய் சிரித்து பேசுவ‌தும்
கூட பிறந்த பிறப்பு!

இப்போதே பார்த்துச்சொல் 
நீ தேடிக் கொண்டிருப்ப‌வ‌ன் 
ஒருவெளை
நானாக‌வும் இருக்க‌லாம்!

3 comments:

மதுரை சரவணன் said...

ippadiyum suya vilambaram kottuththu kathalai thetalamo! super. vaalththukkal.

Thoduvanam said...

கவிதை அருமை.தேடியது உங்களைத்தான்.ஏன் சந்தேகம்?.

Sri Ragavendra Systems said...

Oruvelai naanakavum irukkalaam...